அண்ணாமலைக்கு எதிராக கறுப்பு கொடியா? எதுக்கு இந்த பொய் புகார்? சுயவிளம்பரம்?: தி.வி.க. கடும் கண்டனம்
சேலம்: சேலம் வருகை தரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமது இயக்கம் கறுப்புக் கொடி காட்டப் போவதாக பொய்யாக புகார் கூறி பாஜகவினர் சுயவிளம்பரம் தேடுவதாக கொளத்தூர் தா.செ.மணி தலைமையிலான திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேலம் ஏற்காட்டில் நாளை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தின் சேலம் மாவட்டம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் அறிக்கை விவரம்: ஏற்காட்டிற்கு நாளை ( தனியார் ஓட்டல் திறப்பு விழாவிற்காக) பாஜகவின் அண்ணாமலை அவர்கள் வருகையையொட்டி சுய விளம்பரத்துக்காக, ஒரு பரபரப்பை செயற்கையாக ஏற்படுத்த பாஜக கும்பல் சதி செய்கிறது.
திராவிடர் விடுதலைக் கழகமும், தோழமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக சேலம் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அவர்களே பொய்யானதொரு தகவலை தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்தவும், செயற்கையாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விளம்பரம் தேடவும் திட்டமிட்டுள்ளனர்.
நாங்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கான அவசியமோ, தேவையோ தற்போதைய சூழலில் இல்லை. ஆகவே இவர்கள் பரப்பும் செய்தி முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு சேலம் மாவட்ட திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications