நான் அந்தளவுக்கு படிச்சவன் இல்ல.. ஆளுநர் பேச்சு குறித்த கேள்விக்கு நைஸா எஸ்கேப் ஆன எடப்பாடி பழனிசாமி
சேலம்: ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, "நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல" என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், இது ஒரு நாடகம் என்று திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. இப்போது பிரிவது போல பிரிந்துவிட்டு பின்னர், தேர்தல் முடிந்ததும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளும் என திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த பிரச்சாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ஏற்கனவே பல முறை தெளிவாக சொல்லிட்டேன். பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இப்போது மட்டுமல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு பிறகு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுடன் அதிமுக நிச்சயம் கூட்டணி வைத்துக் கொள்ளாது. அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாங்கள் இனி தேர்தல்களை சந்திப்போம்.
ஆனால், திமுக இந்த விஷயத்தில் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை குழப்பி வருகிறது. பாஜகவுடன் அதிமுக மறுபடியும் கூட்டணி வைத்துவிடும் என்றும், நாங்கள் பாஜகவின் பி டீம் என்றும் கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அது உண்மை அல்ல. அதிமுக மேல் உள்ள பயத்தில் நடுங்கி இப்படியெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பொய்ச்சாமி, பொய்யர் என விமர்சித்திருந்த நிலையில் அதுகுறித்துப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "நான் இதுவரை எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது." எனக் கூறியுள்ளார்.
மேலும், "ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார் உதயநிதி. ஆனால் இப்போது நாங்கள் என்ன செய்தோமோ அதைத்தான் மீண்டும் திருப்பித் திருப்பி செய்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சொல்வார்களா? 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குகிறார்களாம், அப்படி வாங்கி எங்கு கொண்டு போய் கொடுக்கப்போகிறார்? திமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முட்டையை மக்கள் கொடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
ஆரியம், திராவிடம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "இதுக்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை. திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு நான் சரியான நபர் அல்ல. தவறான பதில் கொடுத்து விடக்கூடாது. அறிஞர்களைப் பார்த்துத்தான் இதனை கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications