புகழேந்தி யார்? வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாதவர்! நோட்டா கிட்ட தோற்றவர்! இபிஎஸ் கடும் தாக்கு
சேலம்: பெங்களூர் புகழேந்தி யார், அவருக்கு அதிமுக அலுவலக விவகாரம் குறித்து பேச என்ன உரிமை இருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு நடந்த நாளன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை நடந்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவி கேட்டு ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு என்ன
அதன் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா? ஒரு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பது என்பது பெரிய செயல்.

வன்முறை
கட்சி அலுவலகத்தில் வன்முறை என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை என கூறிய நீதிபதி, ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து புகழேந்தி கூறுகையில் அதிமுக அலுவலக வழக்கில் தீர்ப்பு என்பது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு இல்லை. ஓபிஎஸ்ஸை அதிமுக அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லையே என தெரிவித்திருந்தார்.

புகழேந்தி யார்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் கூறுகையில் அதிமுக அலுவலகம் குறித்து பேசுவதற்கு புகழேந்தி யார், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். அமமுகவில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவுக்கு களங்கம்
அதிமுகவில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். அதனால் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிவிட்டோம். அவருக்கு அதிமுக குறித்து பேச எந்த உரிமையும் இல்லை. ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைகூட பெற இயலாதவர்.

நோட்டாவை விட குறைவு
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் ஓசூரில் போட்டியிட்டு 2000 வாக்குகளையே பெற்றார். அதாவது நோட்டாவை விட குறைச்சலான வாக்குகளையே பெற்றார். எனவே அவர் எல்லாம் பெரிய ஆளே கிடையாது. ஊடகங்கள்தான் அவரிடம் பேட்டி எடுத்து பெரியாளாக்குகின்றன என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications