புகழேந்தி யார்? வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாதவர்! நோட்டா கிட்ட தோற்றவர்! இபிஎஸ் கடும் தாக்கு
சேலம்: பெங்களூர் புகழேந்தி யார், அவருக்கு அதிமுக அலுவலக விவகாரம் குறித்து பேச என்ன உரிமை இருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு நடந்த நாளன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை நடந்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவி கேட்டு ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு என்ன
அதன் தீர்ப்பு இன்று வெளியானது. அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா? ஒரு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பது என்பது பெரிய செயல்.

வன்முறை
கட்சி அலுவலகத்தில் வன்முறை என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை என கூறிய நீதிபதி, ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து புகழேந்தி கூறுகையில் அதிமுக அலுவலக வழக்கில் தீர்ப்பு என்பது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு இல்லை. ஓபிஎஸ்ஸை அதிமுக அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லையே என தெரிவித்திருந்தார்.

புகழேந்தி யார்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவர் கூறுகையில் அதிமுக அலுவலகம் குறித்து பேசுவதற்கு புகழேந்தி யார், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். அமமுகவில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவுக்கு களங்கம்
அதிமுகவில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். அதனால் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிவிட்டோம். அவருக்கு அதிமுக குறித்து பேச எந்த உரிமையும் இல்லை. ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைகூட பெற இயலாதவர்.

நோட்டாவை விட குறைவு
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் ஓசூரில் போட்டியிட்டு 2000 வாக்குகளையே பெற்றார். அதாவது நோட்டாவை விட குறைச்சலான வாக்குகளையே பெற்றார். எனவே அவர் எல்லாம் பெரிய ஆளே கிடையாது. ஊடகங்கள்தான் அவரிடம் பேட்டி எடுத்து பெரியாளாக்குகின்றன என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!











Click it and Unblock the Notifications