“விவசாயிகள் கொந்தளிப்பில் இருப்பதால் என் மீது குறை சொல்கிறார் ஸ்டாலின்” - எடப்பாடி பழனிசாமி ரிப்ளை!
சேலம்: "திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், என் மீது முதல்வர் குற்றம்சாட்டுகிறார்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் இபிஎஸ் பதில் கொடுத்துள்ளார்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?

"சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நெல் கொள்முதல் விஷயத்தில் திமுக அரசு மெத்தனமாக, அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதால் விவசாயிகள் துன்பப்படுகின்றனர். முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு பயிரகளை அறுவடை செய்திருந்தால் நெல் மழையில் நனைத்திருக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவு உள்ளது. இதுதான்உண்மை நிலை.
திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குறவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அரசு திமுக அரசு. விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் சினிமா பார்க்க செல்கிறார் முதல்வர். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு.
என்னை பச்சை துண்டுபோட்ட விவசாயி என ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நான் விவசாயிதான் என்பது அனைவருக்கும் தெரியும். எம்எல்ஏ ஆனது முதல் விவசாயம் செய்து வருகிறேன். மறைத்து சொல்லவில்லை. அது தான் எனது தொழில். ஆனால், விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு ஆனால், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின். அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பதால் என்னை விமர்சனம் செய்கிறார்.
நெல் ஈரப்பதம் 22 சதவீமாக ஆக உயர்த்தம் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. என்ன காரணத்துக்காக நிராகரித்தார்கள் என்று சொன்னால் தானே பதில் சொல்ல முடியும். 3 வேளாண் சட்டங்கள் என்ன என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் சொல்லட்டும். நான் சொல்கிறேன். தமிழக விவசாயிகள் எப்படி அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் சொல்ல வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டது கிடையாது. கோரிக்கைகளை நீங்கள் தான் போராடிவாங்க வேண்டும். எதிர்க்கட்சி தான் அதை செய்ய வேண்டியுள்ளது. காவிரி பிரச்சனையில் அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முடக்கினார்கள். நீட் பிரச்சனை பற்றி திமுகவினர் என்ன பேசினார்கள். நாடாளுமன்றத்தில் பேச முடிந்ததா? பேசினால், நீங்கள் செய்த ஊழல் வெளியே வந்துவிடும் என அச்சம்.
100க்கு 100 வெற்றி என மார்தட்டிக்கொள்ளக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்கு நன்மை செய்யணும். 39 எம்.பிக்களை வைத்து இருந்து என்ன பயன்? மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படும்போது வாதாடி, போராடி பெறத்தான் உங்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அதை மறந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் செய்ய மறந்ததை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதனை பற்றி கவலைப்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் பிரச்சனை முடிந்து போன ஒன்று. அரைத்த மாவையே அரைக்கறீர்கள். எஸ்ஐஆரில் என்ன பிரச்சனை உள்ளது. நீங்கள் நியமித்த கலெக்டர்கள் தான் செயல்படுத்துகின்றனர். வீட்டுக்கு வீடு திமுகவினர் நிற்கின்றனர். அதிகாரிகளை நியமித்து கட்டுக்கட்டாக படிவங்களை கொடுக்கின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் திமுகவினரை கையெழுத்து போட்டு படிவங்களை கொடுக்கின்றனர். இந்த முறைகேடுகளைக் களைய வேண்டும்.
நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன்? நிரந்தர டிஜிபி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், அதைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார். எனக்கு அருகதை உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. மாநில அரசு தான் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான பட்டியலை அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழக அரசுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால் தான் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.
இதுதான் உண்மை. ஆனால் சட்டத்துறை அமைச்சர், தவறாக இப்படி பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படும்? உண்மை செய்திகளை மக்களிடம் சொல்ல வேண்டும். மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications