இறந்த தந்தையின் உடலை மாற்றிய அதிகாரிகள்.. சேலத்தில் நீதிபதியிடம் ஓடிய மகன்.. என்னாது ரூ.30 லட்சமா?
சென்னை: இறந்த தந்தையின் உடலை கேட்டு, மகன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், முக்கிய உத்தரவினை சேலம் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்த வழக்கில் போலீஸ் தரப்பு என்ன பதிலளிக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
திருவாரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. இவர் காரைக்காலில் தங்கி தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்... இந்நிலையில், கடந்த மாதம் இவர் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து ராஜேந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் காரைக்கால் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போதுதான், ராஜேந்திரனின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது தெரியவந்தது.
நஷ்டஈடு: இதனால், தன்னுடைய தந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரியும் ராஜேந்திரனின் மகன் ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,"என்னுடைய தந்தை ராஜேந்திரன்; காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார். கடைசியாக, என் தந்தையை ஜூன் மாதம் திருநள்ளாறில் பார்த்தேன். அவருக்கு மொபைல் போன் பயன்படுத்த தெரியாது. கடந்த 14ம் தேதி, காரைக்கால் சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன், என் வீட்டுக்கு வந்து புகைப்படம் ஒன்றை காண்பித்து, ஜூலை 22ல் தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வேறொரு சடலம்: மறுநாள் தந்தையின் உடலை பெற குடும்பத்தினருடன், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, தந்தையின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டினர். தந்தையின் உடலை வேறொரு குடும்பத்திடம் வழங்கியது தெரியவந்தது.
காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம், கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் உடலை பெற்ற வேறொரு குடும்பத்தினர், 15 நாட்களுக்கு முன் இறுதி சடங்குகள் முடித்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில், இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தந்தை இறப்பில் சந்தேகத்தை உருவாக்குகிறது. இயற்கை மரணம் போல தெரியவில்லை.
அலட்சியம்: அலட்சியம் மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ், மருத்துவமனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை, காரைக்கால் கலெக்டர் உள்ளிட்டோர் எடுக்க வேண்டும். டி.என்.ஏ., உள்ளிட்ட அறிவியல்பூர்வ சோதனையை நடத்தி, என் தந்தையின் உடலை ஒப்படைப்பதோடு, குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறந்த ராஜேந்திரனின் உடலை தவறுதலாக ஒரு மாதத்துக்கு முன்பாக சேலத்தை சேர்ந்த குடும்பத்திடம் மாற்றி ஒப்படைத்து விட்டதாகவும், அவர்களும் ராஜேந்திரன் உடலை அடக்கம் செய்து விட்டதாகவும், அந்த உடலை தோண்டியெடுத்து மீண்டும் மனுதாரர் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தந்தை உடல்: இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.. இதனால், உயிரிழந்த தந்தையின் உடல் மகனிடம் ஒப்படைக்கப்படுமா? குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு இந்த வழக்கில் ஏற்பட்டு வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications