தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக... தேமுதிகவுக்கு குட்டு வைத்த ஜி.கே.மணி
சேலம்: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டும் என்றும், கிராமம் கிராமமாக சென்று வீடு தவறாமல் ஆதரவு திரட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பாமக உருவெடுத்துள்ளதாகவும், அதை மனதில் வைத்து அந்த இடத்தை தக்கவைக்கும் பொருட்டு பணிகள் இருக்க வேண்டு என கேட்டுக்கொண்டார்.

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கட்சி யார் என்பதில் பாமக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. தேமுதிக தான் 3-வது பெரிய கட்சி என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வரும் நிலையில், பாமக தான் 3-வது பெரிய கட்சி எனக் குறிப்பிட்டு பேசி தேமுதிகவுக்கு ஜி.கே.மணி குட்டு வைத்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரம் தாழ்ந்து பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுக்காது என்றும், அவரது பேச்சு கடும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். இது போன்று பேசும் போது, அந்த நிர்வாகியை அழைத்து கட்சி தலைவர் கண்டிக்க வேண்டியது பொறுப்பு எனவும் கூறினார். கருணாநிதியை பற்றி ஒரு முறை பாமக நிர்வாகி விமர்சித்து பேசிய நிலையில், உடனடியாக அந்த நிர்வாகியை தொடர்புகொண்ட ராமதாஸ் கடுமையாக கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்ததாக பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.
தமிழகத்தில் பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், அந்த வகையில் சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைத்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
Recommended Video
இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக இயற்றி மத்திய அரசு ஒப்புதலுடன் அதை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications