இதுக்குதானே ஆசைப்பட்டாய்.. நன்றாக பார்.. மனைவியின் கள்ளக்காதலால் குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மனைவியின் கள்ளக்காதலால் விரக்தியடைந்த கணவன் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended Video

    மனைவியின் கள்ளக்காதலால் நேர்ந்த சோகம்....2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை!

    திண்டுக்கல் மாவட்டம், மங்கலப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (33). சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் தாபா ஹோட்டலில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் தாபாவிற்கு அருகிலேயே உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் மனைவி முருகேஸ்வரி (27), மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணபிரியா (5) ஆகியோருடன் குடியிருந்து வந்தார்.

    முருகனின் காலில் சுடுநீர்

    முருகனின் காலில் சுடுநீர்

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போது முருகனின் காலில் சுடுநீர் பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். அப்போது மனைவி முருகேஸ்வரி சந்தேகப்படும் வகையில் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்ததை அறிந்தார். இதை முருகன் பல முறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    விரக்தி

    விரக்தி

    ஆனால் முருகேஸ்வரி கேட்ட பாடில்லை. இதனால் விரக்தி அடைந்த முருகன், நேற்று முன் தினம் மாலை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு சென்ற அவர் நேற்று முன் தினம் இரவு இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    அழுது கொண்டே பேசிய முருகன்

    அழுது கொண்டே பேசிய முருகன்

    அதில் முருகன் அழுது கொண்டே "இதற்கு தானே ஆசைப்பட்டீங்க, எங்களை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க, கொன்னுட்டீங்க இந்தா பார்த்துக்கோங்க" என்று கூறி தனது உறவினர்களுக்கெல்லாம் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    இதுகுறித்து மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது நேற்று மாலை சங்ககிரி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் ஒரு திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள மாந்தோப்பில் முருகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கிலிட்டபடி சடலமாக கிடந்தனர்.

    அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    இதையடுத்து உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் கணவன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீரழியும் குடும்பங்கள்

    சீரழியும் குடும்பங்கள்

    கணவனோ மனைவியோ திருமணத்திற்கு மீறிய உறவால் ஒருவர் கொல்லப்படுவதும், இன்னொருவர் சிறைக்கு செல்வதும், விரக்தியில் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த சம்பவத்தால் இன்னமும் வாழ்க்கையே தொடங்காத குழந்தைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இவர்கள் உணருவதாக தெரியவில்லை. குன்றத்தூர் அபிராமி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது பிள்ளைகளை கொன்றார். அது போல் குழந்தைகளை டார்ச்சர் செய்யும் சம்பவங்களையும் அண்மை செய்திகளில் பார்த்துள்ளோம். ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியும் கள்ளக்காதலால் தினம் தினம் ஒரு குடும்பமாவது சீரழிந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+