கிருஷ்ணகிரி அருகே.. பைக் மீது மோதி நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. வாலிபர் பரிதாப பலி
சேலம்: இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் அரசு பஸ் மோதியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை சென்று கொண்டிருந்த, கல்லாவி புதூரைச் சேர்ந்த கிட்டப்ப நாயுடு மகன் முருகேசன் என்பவர் மீது திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோட்டு அருகே நேருக்கு நேர் மோதியது.

இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் முருகேசனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபராத்தப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற 20 வயது வாலிபரும், குருபசப்படியை சேர்ந்த அவரது நண்பரான நவீன்குமார் என்பவரும் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர். சந்தோஷ் பைக்கை ஓட்டிய நிலையில், சப்படியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது வேகமாக மோதி விட்டுச் சென்றுள்ளது. இதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நவீன்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி-பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்குகள் செல்ல போதிய வசதி இல்லாததால் மெயின் ரோட்டில் அவர்கள் செல்கிறார்கள். வேகமாக செல்லும் வாகனங்களில் மோதி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications