மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவு...டெல்டா விவசாயிகளுக்கு அதிர்ச்சி!!

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து இருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.81 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 4,513 கன அடியிலிருந்து 4,031கன அடியாக குறைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 55.92 டிஎம்சி ஆக இருக்கிறது.

Mettur dam water level has reduced; farmers worry

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரியத் துவங்கியுள்ளது. இதற்குக் காரணம் கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்து இருப்பதுதான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 95.92 அடியாகவும், நீர் இருப்பு 59.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+