ஏற்காட்டில் சுமதியை கொலை செய்துவிட்டு கணவருக்கு தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ்! பகீர் தகவல்!
சேலம்: ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவன் அதிர்ச்சியடைந்த நிலையில் அதை அனுப்பியவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (32). லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் இவருக்கும், நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கடந்த 23-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சுமதி, அதன்பின் வீடு திரும்பவில்லை. கணவரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
மனைவி காணவில்லை என சண்முகம் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, மாரமங்கலம் மலைக் கிராமத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள மளிகைக் கடையில் ஒரு பார்சலை கொடுத்து, சண்முகத்திடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
அந்தப் பார்சலை பிரித்துப் பார்த்த சண்முகத்திற்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில், சுமதி அணிந்திருந்த தாலி இருந்திருக்கிறது. அந்த தாலியை யார் கொடுத்தனுப்பியது என ஓட்டுநரிடம் சண்முகம் விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் கொடுத்தனுப்பியது என தெரியவந்தது.
வெங்கடேஷிடம் விசாரித்தபோது, "உங்கள் மனைவி சுமதி இந்த தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, உங்களோடு வாழ முடியாது எனக்கூறி எங்கேயோ சென்றுவிட்டார். யார் அவருடன் சென்றார் என்று எனக்குத் தெரியாது" என பதிலளித்துள்ளார். இருப்பினும், போலீஸார் தங்களது பாணியில் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
சுமதிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், கடந்த 23-ம் தேதி சுமதியைக் கொலை செய்து, சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி பள்ளத்தில் வீசியதாகவும் வெங்கடேஷ் ஒப்புக் கொண்டார். உடனடியாக, சுமதி உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் மூலம் சுமதிக்கும் வெங்கடேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சண்முகம் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனது காபி தோட்டத்திற்கு சுமதியை வரவழைத்து வெங்கடேஷ் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், வெங்கடேஷின் தொலைபேசி அழைப்புகளை சுமதி தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். வேறு நபர்களுடன் சுமதி பேசியது வெங்கடேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்த வெங்கடேஷ், உல்லாசமாக இருந்த பின்னர் ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
பின்னர், தாலியைக் கழற்றி எடுத்துக் கொண்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் சடலத்தை வைத்து கட்டி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். குப்பனூர் மலைப்பாதையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வளைவில் இருந்த பள்ளத்தில் சடலத்தை தூக்கி வீசியுள்ளார். சுமதி, வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாக நம்ப வைப்பதற்காகவே, தாலியைப் பார்சலில் அனுப்பி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications