சேலம் மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் தீவிபத்து! 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்! டிரைவருக்கு பாராட்டு
மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்.
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென தீபிடித்து எரிந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கோவையிலிருந்து பெங்களூர் செல்ல ஆம்னி பேருந்து ஒன்று நேற்று கோவை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் ராஜன் இயக்கினார். இந்த பேருந்தில் ராஜன் உள்பட 44 பேர் பயணம் செய்தனர்.
மேட்டூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பக்கத்திலிருந்து லேசான புகை வந்தது. இதை பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை பேருந்திலிருந்து உடனே இறங்குமாறு டிரைவர் அறிவுறுத்தினார்.

ஆபத்தை உணர்ந்த பயணிகள்
இதையடுத்து ஆபத்தை உணர்ந்த பயணிகள் முண்டியடித்து கொண்டு கதவு வழியாக இறங்க முயற்சித்தனர். ஒரே ஒரு கதவு என்பதால் சிலர் ஜன்னல் கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதைத் தொடர்ந்து பேருந்து முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

உடமைகள் தீக்கிரை
பயணிகள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு இறங்கிவிட்டதால் அவை எல்லாம் தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கருமலைக் கூடல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து கருமலைக் கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முண்டியடித்து இறங்கிய மக்கள்
பயணிகள் பேருந்திலிருந்து முண்டியடித்துக் கொண்டு இறங்கியதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை டிரைவர் மட்டும் அலர்ட்டாக இல்லாமல் இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன
இந்த தீவிபத்திற்கான காரணத்தை போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். அது போல் கார் மெக்கானிக் பணியாளர்களை வரவழைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில்தான் விபத்திற்கான காரணம் என்னவென தெரியும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் சூதானமாக இருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications