500 ரூபாய் தந்து மாணவியின் அம்மாவை அழைக்கிறார் கணக்கு வாத்தியார்.. கொந்தளித்த பெற்றோர்
கட்சி சாயம் பூசிய கம்புடன் பாடம் நடத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது
சேலம்: "500 ரூபாய் தந்து மாணவியின் அம்மாவை தவறாக அழைக்கிறார் அந்த கணக்கு வாத்தியார்.. பிள்ளைகளை அடிப்பதற்காக நீளமான கம்பு வெச்சிருக்கார்.. அதில் ஒரு அரசியல் கட்சி சின்னம் தெரியற மாதிரி பெயின்ட் அடிச்சு வெச்சிருக்கார்.. ஸ்கூல் நடத்தறீங்களா? அரசியல் பண்றீங்களா?" என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்!
சேலம் மாவட்டம் தும்பிப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் அன்புமணி.
இவர் ஒரு கணக்கு டீச்சர். ஆனால் 8-ம் வகுப்பு மாணவிகளை கணக்கு பண்ணி, ஒரு கட்டத்தில் அந்த பிள்ளைகளிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கணக்கு வாத்தியார்
இதனை ஒரு மாணவி வீட்டில் தன் அம்மாவிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மா, ஸ்கூலுக்கு வந்து கணக்கு வாத்தியாரிடம் இது பற்றி கேட்டுள்ளார். ஆனால் அந்த கணக்கு வாத்தியார் என்ன பண்ணார் தெரியுமா? அந்த அம்மாகிட்டயே 500 ரூபாய் தந்து, தவறாக அழைத்துள்ளார்.

ஆத்திரம்
இதையடுத்து மேலும் அதிர்ந்து போன அந்த மாணவியின் தாயார் ஊர் மக்களிடம் புகார் சொல்லி உள்ளார். ஆத்திரமடைந்த ஊர் மக்கள் திரண்டு வந்து வாத்தியாரிடம் இது பற்றி கேட்டபோது, "உங்களால் என்னை எதுவுமே செய்ய முடியாது" என்று மிரட்டுகிறாராம்!

கட்சி சின்னம்
அது மட்டுமில்லை.. எல்லோரும் ஒன்று திரண்டு ஸ்கூலுக்கு போனபோதுதான் தெரிந்தது, மாணவ மாணவிகளை அடிப்பதற்காகவே ஒரு நீளமான மூங்கில் குச்சியை வைத்திருக்கிறார் அந்த வாத்தியார். அந்த குச்சியில் தனது கட்சியின் சின்னம் தெரியுமாறு பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்.

குச்சி எதுக்கு?
இதை பார்த்த பெற்றோர்கள், "ஸ்கூல் நடத்துறீங்களா? வேற ஏதாவது நடத்துறீங்களா? முதல்ல எதுக்கு பொம்பள பிள்ளைகளை கம்பு வெச்சி அடிக்கிறது? பாடம் நடத்துகிறாரா? இல்லை அரசியல் கத்து குடுக்கிறாரா? ஒரு வாத்தியார் இப்படி குச்சி வெச்சிருக்கலாமா? இந்த வாத்தியார் திரும்பவும் ஸ்கூலுக்கு வந்தால் கலவரம்தான் வெடிக்கும்" என்று கொதித்து போய் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications