"அன்புமணிதான் உன்னை கொல்ல சொன்னார்" னு சொல்லி 15 பேர் வந்தனர்! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகார்
சேலம்: அன்புமணியின் ஆதரவாளர்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர் என பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்ததாக ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது.

பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், துக்க வீட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம்.
அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தன. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அன்புமணியின் டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா? பொதுக் குழு கூட்டிய நாளில் இருந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். ஒவ்வொரு வண்டியாக தாக்கினார்கள்.
என்னை கொலை செய்ய அன்புமணிதான் ஆட்களை அனுப்பியுள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் திடீரென தாக்கினர். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர்.
என்றைக்கோ போகும் உயிர் ராமதாஸ் மகன் கையால் போகட்டும் என காரை விட்டு இறங்க பார்த்தேன். ஆனால் உடன் இருந்தவர்கள் என்னை இறங்கவிடாமல் தடுத்துவிட்டனர் என அருள் தெரிவித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக எம்எல்ஏ அருளின் ஆதரவாளர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! தந்தை-மகன் பிரச்சனை நாளை சரியாகும்! கட்சி? பாமக வழக்கில் நீதிபதி கேள்வி -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications