Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அன்புமணிதான் உன்னை கொல்ல சொன்னார்" னு சொல்லி 15 பேர் வந்தனர்! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: அன்புமணியின் ஆதரவாளர்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர் என பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்ததாக ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது.

arul pmk anbumani

பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், துக்க வீட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தன. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அன்புமணியின் டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா? பொதுக் குழு கூட்டிய நாளில் இருந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். ஒவ்வொரு வண்டியாக தாக்கினார்கள்.

என்னை கொலை செய்ய அன்புமணிதான் ஆட்களை அனுப்பியுள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் திடீரென தாக்கினர். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர்.

என்றைக்கோ போகும் உயிர் ராமதாஸ் மகன் கையால் போகட்டும் என காரை விட்டு இறங்க பார்த்தேன். ஆனால் உடன் இருந்தவர்கள் என்னை இறங்கவிடாமல் தடுத்துவிட்டனர் என அருள் தெரிவித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பாமக எம்எல்ஏ அருளின் ஆதரவாளர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+