எதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா
சேலம்: சேலம் மாநகராட்சியில் ஒரே தெருவைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய வெள்ளி வியாபாரி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சென்று வந்ததை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்ததால், ஒரே தெருவைச் சேர்ந்த 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

வீடு வீடாக ஆய்வு
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தியது. மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கண்காணிப்பு குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளி வியாபாரி
கட்டுப்படுத்தப்பட்ட 32 பகுதிகளில் 60 ஆயிரம் வீடுகளில் மாநகராட்சி குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்தான் 54 வது வார்டு சீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது கண்டறியப்பட்டது. வெள்ளி வியாபாரியான இவர் அந்த வேலைக்காக இவர் மகாராஷ்டிரா சென்றுள்ளார்.

ரகசியம்
மறுபடியும் சேலம் திரும்பியபோது முறைப்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியமாக இருந்துள்ளார் இவர். மேலும் அக்கம்பக்கத்தினருடன் பழகியதாலும், அவர் வீட்டுக்கு பிறர் வந்து சென்றதாலும், கொரோனா தொற்று அந்த ஏரியாவுக்கே பரப்பப்பட்டுள்ளது.

போலீஸ் வழக்கு
எனவே, கொண்டலம்பட்டி காவல் நிலையத்தில், இவர் மீது நோய்த்தொற்று ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் செய்யும் தவறு, பிற மக்களையும், சமூகத்தையும் எப்படி பாதிக்கிறது பாருங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications