கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு.. கொரோனா பணியிலிருந்து விலக்கு.. சேலம் டீன் சபாஷ் உத்தரவு
சேலம்: கொரோனா பாதிப்பால் மதுரையில் கர்ப்பமாக இருந்த மருத்துவர் உயிரிழந்துள்ள நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் மருத்துவராக இருந்த சண்முக பிரியா, கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தார்.

கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால் அவர் தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கக் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததுள்ளது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வேறு வார்டுகளில் அவர்கள் சிகிச்சை அளிக்க பணியமர்த்தப்படுவார்கள். இதுகுறித்து அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து இருப்பதாக டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மருத்துவமனை டீன் முருகேசனின் இந்த அறிவிப்பு சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வரவேற்பைப் பெற்று உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா பணியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications