செல்போன் டவரே கிடைக்காத ஜருகுமலை.. சிறுதானியங்கள் நிறைந்த கஞ்சமலை.. ஆரஞ்ச் விலையும் சேர்வராயன்
சேலம்: கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட "மா"நகரம் சேலம் ஆகும். இங்கு காணப்படும் சேர்வராயன் மலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சேலத்தின் வடக்கே சேர்வராயன் மலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டத்தில் மிக உயரமான மலையாகும். அது போல் கிழக்கில் கோதாமலையும், தெற்கில் ஜருகுமலையும் தென்மேற்கில் கஞ்சமலையும் காணப்படுகிறது.
இந்த பகுதிகளை சுற்றி காவிரியின் கிளையாறான திருமணிமுத்தாறு பாய்கிறது. சேர்வராயன் மலையின் உயரம் 4000 - 5000 அடி வரை இருக்கும்.

இயற்கையின் ஊற்று
இந்த மலையில் இயற்கையின் ஊற்றுக்கண்ணாக நிறைய மரங்களும் மூலிகை செடிகளும் காட்டு விலங்குகளும் காணப்படுகின்றன. இங்கு காபி, சில பல வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த மலையில்தான் ஏற்காடு எனும் சுற்றுலா தளம் காணப்படுகிறது. இந்த மலை சேர மன்னன் நிலமாகவும் அவர் ஆண்ட பகுதியாகவும் இருந்திருக்கும் என தெரிகிறது.

சேர்வராயன் மலை
இதனால்தான் இந்த மலைக்கு சேர்வராயன் என்ற பெயர் வந்திருக்கும் என்கிறார்கள். ஒழுங்கற்ற பீடபூமியில்தான் ஏற்காடு உள்ளது. இங்கு வடக்கில் சன்னியாசிமலை என கூறப்படும் டஃப் மலை இருக்கிறது. சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பர் மென்ட், யூகாலிப்டஸ், சிற்றடோரா ஆகிய வாசனை செடிகள் உள்ளன. இந்த செடிகள் வளர தேவையான தட்பவெப்பநிலை இந்தியாவிலேயே இங்குதான் காணப்படுகிறது.

சுண்ணாம்பு கல்
இந்த மலையில் சுண்ணாம்புக் கல், பாக்சைட்டும் உள்ளன. கஞ்சமலையின் பரப்பளவு 18.5 சதுர கி.மீ. ஆகும். இதன் உயரம் 3200 அடியாகும். காவிரியின் கிளை நதிகளான சர்பங்கா, திருமணிமுத்தாறு ஆகியவை கஞ்சமலையை சுற்றி பாய்கின்றன. இந்த மலையில் சித்தர்கள் வாழ்வதாக ஐதீகம். இங்கு நிறைய கோயில்கள் காணப்படுகின்றன.

இரும்பு தாது
சித்தேஸ்வரன் மற்றும் காளியம்மன் கோயில்கள் முக்கியமான கோயில்களாகும். மலை உச்சியில் சித்தர், பெருமாள், கன்னிகள், சிவன் ஆகியோருக்கு ஆலயங்கள் உள்ளன. இந்த மலையில் இரும்பு தாது காணப்படுகிறது. இந்த மலையை ஏற 3 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த ஜருகுமலையில் உள்ள மலைகிராமங்களில் செல்போன் டவர் கிடைக்காததால் கொரோனா ஆன்லைன் வகுப்புகளின் போது மலையின் உச்சிக்கு சென்று மாணவர்கள் படித்தனர்.












Click it and Unblock the Notifications