இளம் விதவைகளே குறி.. நிர்வாண படம் எடுத்து மிரட்டியவருக்கு கொரோனா.. கைது செய்த போலீசுக்கும் தொற்று!
கொரோனா பாதித்தவரை கைது செய்த போலீசுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது
சேலம்: பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கொரோனா பாதித்தவரை கைது செய்த சேலம் போலீசுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் தாதகாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் ஒரு பியூட்டிஷியன்.. தனியாக அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார்.
தங்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்றும், விபசார தொழில் இந்த பியூட்டி பார்லரில் நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் இவர் மீது 2 தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஏழை பெண்கள்
ஏழை பெண்களே லோகநாதன் தம்பதிக்கு குறியாக இருந்துள்ளது.. மேலும் பணத்துக்கு விழுந்துவிடும் பெண்களையும் இவர்கள் ஈஸியாகவே வழிக்கு கொண்டு வந்துள்ளனர்.. கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்கள், ஏழை பெண்கள் போன்றோரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர். ஒருவேளை இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தீபா அவர்களை ஆபாச படம் எடுத்து, அதை வைத்து கொண்டு மிரட்டுவார்களாம்.

தலைமறைவு
3 பேர் கைதான நிலையில், லோகநாதன் மனைவி ரூபா தலைமறைவாகிவிடவும், அவர்களை தேடி வந்தனர். இந்த சமயத்தில்தான் கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

டெஸ்ட்
இதைகேட்டு அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குற்றவாளிகளை தாங்கள்தான் கைது செய்து கோர்ட் வரை கொண்டு சென்று ஆஜர்படுத்திவிட்டு, விடிகாலையில்தான் தங்களது வீட்டுக்கு சென்றோம், குழந்தைகளுடன் இருந்தோம் என்று அழுதபடியே சொன்னார்கள். லோகநாதனை கைது செய்ய மகளிர் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் சென்றிருந்தனர்.

சோதனை
கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேனிலும், மகளிர் போலீஸ் ஸ்டேனிலும் 3 பேரையும் வைத்திருந்தனர். இந்த கைது நடவடிக்கையில் கிட்டத்தட்ட 32 போலீசார் ஈடுபட்டனர். இப்போது இவர்கள் எல்லோருமே கருப்பூர் அரசு பொறியியல் காலேஜ் ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஆண் போலீசாருக்கும், நேற்று பெண் போலீசாருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.

ஆண் போலீஸ்
அதில் ஆண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்தான் கைதானவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர் ஆவார். லோகநாதனை கைது செய்து வைத்திருந்த 2 போலீஸ் ஸ்டேஷன்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.. லோகநாதன் உட்பட 3 பேரும் ஓமலூர் கிளை சிறையில் உள்ளனர்.. அந்த ஜெயிலில் சிறை அதிகாரிகள் முதல் 81 கைதிகள் உள்ளனர்.. அங்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவருமே ஷாக்கில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications