முதலில் இளம் விதவைகள்.. அடுத்து ஏழை பெண்கள்... நிர்வாண படம் எடுத்து.. அதிர வைத்த கொரோனா கைதி!
சேலம் கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது: சேலம் கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
சேலம்: இளம் விதவைகளே முதல் குறி... அடுத்து ஏழை பெண்கள்.. இப்படி இளம்பெண்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களும் விரைவில் சேலம் போலீசார் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் தாதகாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் மனைவி தீபா ஒரு பியூட்டிஷியன்.. தனியாக அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார்.
தங்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்றும், விபசார தொழில் இந்த பியூட்டி பார்லரில் நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் இந்த தம்பதி மீது சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதீப் ஆகியோரை போலீசாரும் கைது செய்தனர். ஆனால் மனைவி ரூபா தலைமறைவாகிவிடவும், அவர்களை தேடி வந்தனர்.

லோகநாதன்
ஏழை பெண்களே லோகநாதன் தம்பதிக்கு குறியாக இருந்துள்ளது.. மேலும் பணத்துக்கு விழுந்துவிடும் பெண்களையும் இவர்கள் ஈஸியாகவே வழிக்கு கொண்டு வந்துள்ளனர்.. கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்கள், ஏழை பெண்கள் போன்றோரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர். ஒருவேளை இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தீபா அவர்களை ஆபாச படம் எடுத்து, அதை வைத்து கொண்டு மிரட்டுவார்களாம்.

சிறை
கைதான லோகநாதன் உட்பட 3 பேரும் ஓமலூர் கிளை சிறையில் உள்ளனர். முன்னதாக, கைதான 3 பேருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. அதில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.. இதைகேட்டு அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.. கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குற்றவாளிகளை அவர்கள்தான் கைது செய்து கோர்ட் வரை கொண்டு சென்று ஆஜர்படுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றனர்.

கதறி அழுதனர்
குழந்தைகளுடன் வீட்டில் இருந்தோமே என்று அழுது கொண்டே இருந்தனர்.. பிறகு அன்னதானப்பட்டி போலீசாருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தவும்பட்டனர்.. அதில் ஆண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிறைக்கு வழிக்காவல் பணியாக அவரை அழைத்துச்சென்ற போலீசார் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

குண்டர் சட்டம்
இந்நிலையில் கொரோனா கைதி லோகநாதன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் தந்தனர். இனி விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications