சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த பெண்ணின் பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தைச் சேர்ந்தவர் இளவரசியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது.

salem women accused her husband, he married her sister after cheating

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளவரசி திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்திக்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி 11ம் தேதி போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் கார்த்தியின் பெற்றோர், இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்பதாகவும் சேலம் போலீசில் இளவரசி புகார் அளித்துள்ளார்.

பொள்ளாச்சியில் சித்த மருத்துவரிடம் கருக்கலைப்பு ஊசி போட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

முன்னதாக இளவரசி, தனது சகோதரியை கார்த்திக் காதலிப்பது போல் நாடகமாடியதாகவும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
salem women complaint against her husband, he married her sister after cheating
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X