ஹைகோர்ட் அனுமதி பெற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. முதல்வர் அறிவிப்பு
சேலம்: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடையை மூடுவது தொடர்பாக போலீசாருக்கும் கடை உரிமையாளர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்ற அனுமதியுடன் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
மேலும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கொரோனா தொற்று பரவலை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறுகின்றன என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தலைவாசலில் அமைக்கப்பட்டுவரும் கால்நடை பூங்கா மூலம் நமது நாட்டு இன மாடுகள் மற்றும் நாய்கள், கோழிகள் அழியாமல் பாதுகாக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications