Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களை பார்த்தால் கூட முதல்வர் சிரிப்பதில்லை! ஸ்டாலின் ஊரில் இல்லாத போது அமைச்சர் காந்தி ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: எங்களை பார்த்தால் கூட முதலமைச்சர் சிரிப்பதில்லை எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி.

மக்களை பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருப்பதால் தான் தங்களை பார்க்கும் போது அவர் சிரிப்பதில்லை என தனது பேச்சுக்கு காரணம் ஒன்றையும் கூறியிருக்கிறார் அமைச்சர் காந்தி.

The Chief Minister does not smile even when he sees us! Minister Gandhi Open Talk when Stalin is foreign tour!

ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் அமைச்சர் காந்தியின் இந்தப் பேச்சு தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியை பொறுத்தவரை பார்ப்பதற்கு தான் மிரட்டலான தோற்றமும் ஆஜானுபாகுவான உடலும் கொண்டவர். ஆனால் அவர் பேசினால் பச்சக்குழந்தையை போல் இருக்கும்.

அந்தளவுக்கு மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் கொட்டித் தீர்த்துவிடுவார். இவரது பேசும் ஸ்லாங்கை பார்த்து, சட்டசபையில் சக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அந்தளவுக்கு வெகுளித்தனமாக பேசுவார். அதேசமயம் கட்சிப்பணிகள் என வந்துவிட்டால் கோபம் கட்டுக்கடங்காமல் வரும். இப்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு கோபத்தைக் குறைத்துக் கொண்டு சிரித்து பேச பழகிக் கொண்டார்.

இதனிடையே அடுத்த மாதம் சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தரவுள்ளதால், சேலம் கோ ஆப்டெக்ஸ் பட்டு விற்பனை நிலையம் சீரமைப்பு பணிகளை ஆய்வுச் செய்யச் சென்ற அமைச்சர் காந்தி, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து விற்பனை விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அண்ணா, கருணாநிதியை காட்டிலும் முதல்வர் ஸ்டாலின் கைத்தறித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக புகழாரம் சூட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறித்துறையில் 400 தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கைத்தறித்துறையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கடைசியாக, மக்களை பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருப்பதால் எங்களை பார்த்தால் கூட அவர் சிரிப்பதில்லை என அமைச்சர் காந்தி கூறியது தான் ஹைலைட்.

முதல்வர் சிரிக்கிறாரா, சிரிப்பதில்லையா என யாரும் கேட்காமலேயே அவருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கும் வகையில் பேசி அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் அமைச்சர் காந்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+