சேலம் ஓமலூரில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
சேலம்: சேலம் அடுத்துள்ள ஓமலூரில் உள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டாசுகளை நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். சற்று அலட்சியமாக இருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். பட்டாசுகள் நொடியில் மிகப் பெரியளவில் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதே இதற்குக் காரணம்.

வெடி விபத்து
அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது சேலத்தில் நடந்துள்ளது. அங்கு அம்மன் கோயில் விழாவின் போது திடீரெனப் பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பூசாரிப்பட்டி அடுத்துள்ள கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. உள்ளூரில் மிகவும் பிரசக்தி பெற்ற இந்தக் கோயில் திருவிழா நடந்து வருகிறது. அம்மன் கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் என வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வெடித்துச் சிதறியது
எனவே, திருவிழாவுக்குத் தேவையான பட்டாசுகளை டூவிலரில் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்தச் சாலையில் குப்பை எரிந்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற டூவிலர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தீயில் விழுந்துள்ளது. அப்போது அதில் இருந்த பட்டாசுகள் உடனடியாக தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.
மூன்று பேர் பலி
எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேட்டை சேர்ந்த செல்வராஜ் (29) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற இருவரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பலர் படுகாயம்
மேலும், இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா நேரத்தில் நடந்த தீவிபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications