சேலம் மாவட்டத்தில் திடீர் கெடுபிடி.. 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு.. காய்கறி வாங்ககூட வெளியே வரக்கூடாது
சேலம்: சேலம் மாவட்டம் முழுக்க இன்று மதியம் 1 மணி முதல் திங்கள் கிழமை காலைவரை, 2 நாட்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக அந்த மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார்.
மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றைத் தவிர, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துமே இரண்டு நாட்களுக்கும் மூடப்பட்டு தான் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் வீடுவீடாக காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி ஏதாவது காரணம் சொல்லி கொண்டு வெளியே வருவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக பரவல் என்ற நிலையை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் அண்டை மாவட்டமான ஈரோட்டில் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக ஆட்சியர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications