நானும் வர்றேன்.. எடப்பாடியும் வரட்டும்.. கிராமத்துக்கு போறோம்.. உதயநிதி ஸ்டாலின் சவால்!
சேலம் பிரச்சாரத்தில் முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
Recommended Video

சேலம்: "கலைஞர் பேரன் நான் வர்றேன்.. எடப்பாடியும் வரட்டும்.. ரெண்டு பேரும் தமிழ்நாட்டில ஏதாவது ஒரு கிராமத்திற்கு போறோம்.. ஜனங்க யார் கிட்ட வர்றாங்க.. யார் கிட்ட தங்கள் குறைகளை சொல்றாங்கன்னு பார்ப்போமா?" முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:
இந்தியாவின் வில்லன் யார் தெரியுமா? மோடிதான். மோடியின் கைக்கூலிகள் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும்! அன்புமணி தான் காமெடியன்.

கவுன்சிலர்
ஏன்னா, எடப்பாடி பழனிசாமியை ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர்-ன்னு அன்னைக்கு சொல்லிட்டு, இன்னைக்கு அங்கேயே கூட்டணி அமைத்துள்ளார்.

பாதுகாப்பு இல்லை
அதிமுக கூட்டணி ஒரு வெட்கம் கெட்ட கூட்டணி. இங்க பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . 2 நாட்களுக்கு முன்பு கூட கோயம்புத்தூர்ல 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளாள். பொள்ளாச்சி சம்பவமும் அப்படியேதான். பெண்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதைதான் காட்டுகிறது.

எடப்பாடி வரட்டும்
தமிழகத்தில் நடப்பது ஒரு சோதனையான ஆட்சி. கலைஞர் பேரன் நான் வருகிறேன், எடப்பாடியும் வரட்டும் ரெண்டு பேரும் தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கு செல்கிறோம்.. யாரை நெருங்கி மக்கள் குறைகளை சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

மோசடி ஆட்சி
இது மோடி ஆட்சி இல்லை.. மோசடி ஆட்சி.. அதனால மோடி ஆட்சியையும் வெட்கம்கெட்ட ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications