சேலம் கலைவாணி வீட்டிற்கு வந்த மந்திரவாதி.. தீவிரமாக நடந்த பூஜை.. இறுதியில் ட்விஸ்ட்
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டியில் கலைவாணி என்பவரது வீட்டிற்கு மந்திரவாதி எனக்கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை சரி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்று மந்திரவாதி கூறியுள்ளார். இதை நம்பி பூஜை செய்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மிசின் கிணறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவர்கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு பட்டு கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (வயது 30). நேற்று காலை வழக்கம் போல் மாணிக்கம் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். வீட்டில் கலைவாணி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, அவரது வீட்டிற்கு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளாராம்.

பின்னர் அவர் கலைவாணியிடம் குடும்பத்தில் கஷ்டங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை சரி செய்ய வேண்டும் என்று கூறினாராம். அதற்கு வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்றும் மந்திரவாதி என்று கூறினாராம். இதனை உண்மை என்று நம்பிய கலைவாணியும், பூஜை செய்வதற்கு ஒப்புக்கொண்டு அந்த நபரை வீட்டுக்குள் வரவழைத்து பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அபோது, ஒரு சொம்பில் நிறைய தண்ணீர் நிரப்பி அதற்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு கற்பூரம் ஏற்றி அந்த நபர் பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவர் கலைவாணியிடம் உனது கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்றி சொம்புக்குள் போட்டால் உங்களுக்கு எந்தவித நோய் நொடியும் வராது என்று தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கலைவாணி கழுத்தில் இருந்த 3.5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பூஜை செய்துவிட்டு கை கால்களை அந்த நபர் கழுவிக்கொண்டு அந்த சொம்பை எடுத்து வீட்டிற்குள் வைக்க வேண்டும் என்று கூறினாராம். உடனே கை, கால்களை கலைவாணி கழுவுவதற்கு சென்றபோது சொம்புக்குள் இருந்த தாலி சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியேறி தப்பிச்சென்றிருக்கிறார்.
கலைவாணி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த அந்த நபர் எஸ்கேப் ஆகியிருந்தார். போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் மர்ம நபர் நகையை அபேஸ் செய்து திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து கலைவாணி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பூஜை என்ற பெயரில் அபேஸ் செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
சேலம் எடப்பாடியில் 9ம் வகுப்பு மாணவியும், தனியார் நிதி நிறுவன ஊழியரும்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications