இணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி
சிங்கப்பூர்: பொய்யான தகவல்கள், புரளிகள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

சமூகவலைதளங்களில் கிளம்பும் புரளிகளை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி சட்டத்தை சிங்கப்பூர் அரசு கையில் எடுத்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், இணையத்தில் உலா வரும் வதந்திகள் உண்மையை தகர்த்தெறிவதாக குறிப்பிட்டார். சமூக வலைதளங்கள் மூலம் பொய் செய்திகளைப் மூன்று பிரிவினர் தான் பரப்பி வருகின்றனர்.
சைபர் அட்டாக் நடத்த விரும்பும் நாடுகள், வர்த்தக ரீதியில் லாபம் நாடுவோர், அரசியல் லாபத்திற்காகவே மாற்று சமூகத்தினரைத் தாக்க வீண் புரளிகளை பரப்புவோர் என பட்டியலிட்டுள்ளார். மத்திய கிழக்கை சேர்ந்த மூன்று ஆண்களால் தாக்கப்பட்டதாக ஜெர்மனியில் பெண் ஒருவர் பொய் செய்தி வெளியிட்டதை சிங்கப்பூர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலர் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகள் சொந்த நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகளையும் பாதிப்பதாக கவலை தெரிவித்தார். எனவே தான் அதனை முற்றிலும் ஒடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை சட்டரீதியாக எதிர்கொள்ள புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதே போல பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்காது. மாறாக பொய் செய்திகளை பரப்புவோர்கள் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
ஒரு செய்தியை வதந்தி என அரசு முடிவெடுத்து ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அரசின் முடிவை எதிர்த்து தாராளமாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications