சிங்கப்பூர்: இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று மேலும் 932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 17,101 .

Singapore: Stay home notice for foreign workers extended to May 18

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சிங்கப்பூரில் 85% கொரோனா பாதிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களில்தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்திருக்கிறது.

அதாவது S pass வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் மே 4-ந் தேதி வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 18-ந் தேதி அதாவது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+