சிங்கப்பூர்: இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று மேலும் 932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 17,101 .

Singapore: Stay home notice for foreign workers extended to May 18

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சிங்கப்பூரில் 85% கொரோனா பாதிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களில்தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்திருக்கிறது.

அதாவது S pass வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் மே 4-ந் தேதி வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 18-ந் தேதி அதாவது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+