பொண்ணு மாப்பிள்ளையை விடுங்க.. பார்வை பூரா பேனர் மேல தான்.. இணையத்தை கலக்கும் பேனர் அட்ராசிட்டி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நண்பனின் திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் கிண்டலான வாசகங்களோடு பேனர் வைத்து சக நண்பர்கள் அசத்தியுள்ளனர். திருமணத்திற்கு வந்த அனைவர் மத்தியிலும் அந்த பேனர் தான் ஹாட் டாபிக் ஆக இருந்துள்ளது. இந்த பேனர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவருக்கும் அருகிலுள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணுக்கும் நேற்று (செப்டம்பர் 13ஆம் தேதி) திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக அவரது நண்பர்கள் வைத்த வரவேற்பு பேனர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

சாதாரண திருமண வாழ்த்து பேனரை போன்று அல்லாமல் வித்தியாசமாக செய்தித்தாள் வடிவில் பேனர் வைத்துள்ளனர். அதில் தலைப்புச் செய்தி என்று மணப்பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக மணமகனுக்குகு திருமண சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என்றும், திருமண விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், அடுத்தடுத்த பத்திகளில், கல்யாண பந்தியில் கலவரம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கறிக்கஞ்சி கிடையாது என சிவில் கோர்ட் தீர்ப்பு அளித்தது என்றும், கறிக்கஞ்சி சாப்பிட்டு காரம் காதிற்கு ஏறி கதறும் கடைசி விவசாயி என்றும் கிண்டல் வாசகங்களுடன் வித்தியாசமான முறையில் கட் அவுட் வைத்துள்ளனர்.
மேலும் கல்யாண மாலை என்று தலைப்பிட்டு மணமகன் தேவை என்றும் சில இளைஞர்களின் பெயர், தகுதி, தொழில் ஆகிய விவரங்களோடு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். பேனரோடு நிறுத்திக் கொள்ளாமல் இதனை போட்டோ பிரேமாகவும் செய்து மணமக்களுக்கு திருமண பரிசாகவும் அளித்துள்ளனர். தற்போது இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இதேபோன்ற ஒரு பேனரும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. புதுச்சேரி காரைக்கால் வாரச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருமண நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அருண் பிரசாத் - மதுநிகா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில், மாப்பிள்ளையின் நண்பர்கள் நியூஸ் பேப்பர் வடிவில் வரவேற்பு பேனர் அடித்து வைத்தனர். அது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.அதில் 'காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை (திருமணம்) செய்து வைக்கப்படுகிறது' கல்யாண பந்தியில் கலவரம், 'கறிக்கஞ்சி கிடைக்காததால் கைகலப்பு' 'நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு' என்றெல்லாம் பல பதிவுகள் உள்ளன.
மேலும், பந்தியில் பலகாரம் திருட்டு எனக் குறிப்பிட்டு சிறுவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், "அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தா தாங்க" எனக் குறிப்பிட்டு, இளைஞர்களின் புகைப்படம், பெயர் மற்றும் மற்ற விவரங்களுடன் மணப்பெண் தேவை அறிவிப்பையும் செய்துள்ளனர். இந்த பேனரும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
வித்தியாசமாக எதையாவது செய்து ட்ரெண்ட் ஆகிவிடும் 2K கிட்ஸ்கள், திருமண வாழ்த்து பேனர்களிலும் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். ஆக, இனி ஊர் ஊருக்கு இந்த 'நியூஸ் பேப்பர்' மாடல் வாழ்த்து பேனர்களைப் பார்க்கலாம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications