சொத்துக் குவிப்பு வழக்கு! பெரியகருப்பன் விடுதலை! நிம்மதி தந்த சிவகங்கை நீதிமன்றம்
சிவகங்கை: கடந்த 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பெரியகருப்பன், அவரது குடும்பத்தினரை சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்துள்ளது. 13 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின் போது அறநிலையத் துறை அமைச்சராகவும் திருப்பத்தூர் எம்எல்ஏவாகவும் இருந்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ 1.20 கோடி சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுல கிருஷ்ணன், மைத்துனன் செந்தில் ஆகியோ் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கானது சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்றைய தினம் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்துள்ளார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பெரியகருப்பனுக்கு இந்த தீர்ப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications