Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி!

சாமியாருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்-வீடியோ

    சிவகங்கை: "என்னால சாமியாரை விட்டு இருக்க முடியல.. அவருகூட பழக கூடாதுன்னு என் கணவர் சொல்லவும்தான் கை, காலை தனியா வெட்டி எடுக்கலாம்னு ஐடியா தந்தேன்.. நான்தான் கதவை திறந்துவிட்டேன்" என்று கணவரை சாமியாருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு 51 வயதாகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்தவர். குடும்பத்துக்காகவே உழைத்து, உழைத்து.. வருஷத்துக்கு ஒருமுறை கூட இவர் ஊருக்கு வருவது அரிது.

    இப்படித்தான் 5 வருடமாக ஊர் பக்கமே இல்லாமல் வெளிநாட்டிலேயே இருந்துள்ளார். ஆனால், இவரது மனைவி பூமதியோ, மாந்திரீகம் செய்யும் சாமியாருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். போனவாரம்தான் மணிமுத்து ஊருக்கு வந்ததும், விஷயத்தை கேள்விப்பட்டு கொதித்து போய், மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனை கொலை செய்துவிடும்படி ஐடியா தந்து, அதன்படியே மணிமுத்து விடிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் மாடியில் கொலை செய்யப்பட்ட நேரம், மனைவி வீட்டுக்குள் கமுக்கமாக படுத்து கொண்டார். இதெல்லாம் தெரியவந்ததையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் சொன்னதாவது:

     சாமியார்

    சாமியார்

    "15 வருஷத்துக்கு முன்பு என் ஊருக்கு சாமியார் வேல்முருகன் குறி சொல்ல வந்தார். அவருக்கு சொந்தஊர் ராமேஸ்வரம். அவரை எனக்கு அப்போதே பிடித்துவிட்டது. அதனால் நெருங்கி பழகினேன். சாமியார் குறி சொல்வதோடு, பரிகார பூஜைகளும் செய்வார். நான் கானாடுகாத்தானில் வசித்து வந்தேன். பிள்ளைகளின் படிப்பை சாக்காக சொல்லி, சாமியாருக்காக காரைக்குடிக்கே சென்றுவிட்டேன்.

     தனி வீடு

    தனி வீடு

    அடிக்கடி சாமியார் என் வீட்டுக்கு வந்து போக ஒரு தனி வீடு எடுத்து கொண்டேன். இது எங்களுக்கு மேலும் நெருக்கத்தை தந்தது. வெளிநாட்டில் இருந்து என் கணவர் வந்ததும், இதை கண்டித்தார். சாமியார்கூட பழக கூடாது என்றார். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்ய முடிவு செய்தேன். சாமியாருடன் இதை பற்றி பேசினேன்.

    திட்டம்

    திட்டம்

    இப்படி கொலை செய்ய, சாமியார் 1 மணிக்கே சுடுகாட்டுக்கு சென்று நிர்வாண பூஜை நடத்திவிட்டு, என் வீட்டுக்கு மயானத்தில் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் பிரகாஷ்குமார், பிரகாஷ் ஆகியோருடன் விடிகாலை 3 மணிக்கு வந்தார். நான்தான் கதவை திறந்துவிட்டேன்.

     குத்தி கொலை

    குத்தி கொலை

    சாமியார் உட்பட 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த என் கணவனை கழுத்து, உடல், கால், என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அப்போது அவர் சத்தம் போட்டு கத்தி விடக்கூடாது என்பதற்காக, முகத்தில் தலைகாணி வைத்து அமுக்கிவிட்டனர். அதன்பிறகு 3 பேரும் வந்த காரிலேயே தப்பிசென்றனர்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+