அதிக விலைக்கு மதுவிற்பனை.. டாஸ்மாக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு..இளைஞர் வெறிச்செயல்
மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை: காரைக்குடி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபான கடையில் 2வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் இளைஞர் ஒருவர் வெறிச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், பல வியாபாரங்கள் சுறுசுறுப்பாகவும், சில வியாபாரங்கள் மந்தமாகவும் மாறி மாறி நடைபெறும். ஆனால் எப்போதும் டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை படு ஜோராகவே நடைபெற்று வருகிறது.
கடந்த பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனை கணக்கே தலைப்பு செய்திகளாக வரும். அந்த அளவிற்கு மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக் விற்பனை
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அதிகமாகவே இருந்து வரும் சூழலில், ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு கூடுதல் விலைக்கு மதுவை விற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீதும் கொடுப்பதில்லை. சில கடைகளில் பில் புக்கை தேடி பிடித்து தருவதும், சில கடைகளில் கூட்டமாக இருப்பதால் பில் தருவதில் சிரமம் இருப்பதாக கூறி குடிமகன்களை அனுப்புவதையும் பார்க்க முடியும்.

விதிமீறல்
அதேபோல் போலி மதுபான விற்பனை, நடு ராத்திரியிலும் கடையை அடைக்காமல் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு நிர்ணயித்த விலையை விடவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அனைத்து கடைகளும் இதுபோல் இல்லை என்றாலும், சில கடைகளில் விதிகள் மீறப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளித்தூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளைஞர் ஒருவர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலில், டாஸ்மாக் ஊழியர் அர்ஜூனன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். டாஸ்மாக் மதுபான விற்பனை முடித்துவிட்டு, கணக்கு பார்த்துக் கொண்டிருந்த போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

2ம் முறை
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அர்ஜூனன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சில வாரங்களுக்கு முன் இதே டாஸ்மாக் கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மீண்டும் இளைஞர் ஒருவர் வெறிச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications