இந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு
சிட்னி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வர விரும்பும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை 2லட்சத்திற்கு கீழ் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவால் அங்கு குடியேற திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனாவால் உலகப் பொருளாதாரம் "கடுமையான மந்தநிலையை சந்தித்துள்ளது. உலகின் எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா சீரழித்துவிட்டது.
இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்ககள் வறுமையில் தள்ளப்பபட்டுள்ளனர். சுமார் 1.5 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6லட்சத்திற்கு அதிகமாக மக்கள் பலியாகி உள்ளனர். தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

பொருளாதாரம் பாதிப்பு
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டு பொருளாதாரத்தில் கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொற்று தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட பயண தடைகள் மற்றும் எல்லை மூடல்களால் கடுமையான நெருக்கடியை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

புலம் பெயர்வோருக்கு பாதிப்பு
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டு கருவூலத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா விண்ணப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்களின் திறனில் உள்ள தடைகள் ஆகியவற்றால் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு (NOM) கணிசமாக பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 2018-19ல் 232,000 ஆக இந்த நிலையில் 2019-20ல் 154,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில் 2020-21ல் 31,000 பணிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதாவது 2லட்சத்திற்கும் குறைவான புலம் பெயர்ந்தோரை அனுமதிக்க முடிவு செய்தள்ளது.

இந்தியர்களை பாதிக்கும்
ஆஸ்திரேலியாவில் 700,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு திறமையான புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிக அளவில் சென்று உள்ளார்கள் என்பது இதுவே மிகப்பெரிய உதாரணம். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சுமார் 90,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் முடிவு இந்தியர்களின் ஆஸ்திரேலிய வேலை கனவை கலைத்துவிட்டது. ஓராண்டுக்கு கனவை மறக்க வைத்துவிடும். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் இந்த முடிவினை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலம் கட்டாயமாக்கப்படும்.

என்ன நிலைமை இப்போது
கடந்த மார்ச் மாதம் சர்வதேச பயணத் தடைகளை ஆஸ்திரேலியா அமல்படுத்தியது. இது சுற்றுலாப்பயணிகள் வருகை மற்றும் தற்காலிக இடம்பெயர்வு விசாக்களில் வருவதைத் தடுத்ததுடன், ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார நிபுணர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் கருத்துப்படி, ஆஸ்திரேலியாவின் பயணத் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில், கொரோனா தொற்றால் 13,900 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 155 பேர் உயிரிழந்தனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications