சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி மரணம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலையில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்பதால் விபத்து நிகழ்ந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இன்றைய தினம் அப்பையநாயக்கன் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலையில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications