யார் அந்த பெண்? சிஎஸ்கே ஏல மேடையில் முதல்முறையாக நடந்த மாற்றம்.. அதிர்ஷ்டத்தை கொண்டு வருவாரா
அபுதாபி: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் தொடங்கி இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் டேபிளில் அமர்ந்திருக்கும் பெண் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் டேபிளில் அமர்ந்திருக்கும் பெண் யார்? அவருக்கும் சிஎஸ்கே அணிக்கு என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முறை சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் அதிக தொகையுடன் களமிறங்கி இருக்கின்றன. சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.43.40 கோடி கையிருப்பில் உள்ளது. இதனை வைத்து சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி வழக்கம் போல் மிக்சர், பாதம் பருப்புடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளது. இம்முறை சிஎஸ்கே அணியின் ஏலத்தில் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், அனலிஸ்ட் ஏஆர் ஸ்ரீகாந்த் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியில் ஏல டேபிளில் முதல்முறையாக ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
18 சீசன்களில் ஒரு முறை சிஎஸ்கே அணி பெண் நிர்வாகியுடன் பங்கேற்றதில்லை. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே யார் அந்த பெண் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. அது வேறு யாரும் அல்ல.. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் தான். அதாவது சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா.
கடந்த 2 சீசன்களாகவே ரூபா குருநாத் தான் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் முதலீடுகளிலும் ரூபா தான் முடிவு எடுத்து வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக்கப்பட்டதற்கு பின்னணியிலும் ரூபாவே இருந்ததாக சொல்லப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் தொடரிலும் ரூபா ஏலத்தில் டேபிளில் அமர்ந்திருந்தார்.
தற்போது ஐபிஎல் ஏலத்திலும் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக பங்கேற்றுள்ளார். இதனால் கூடுதம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்த பின், சிஎஸ்கே அணியை முழுமையாக கட்டுப்படுத்தி வரும் நிர்வாகியாக ரூபா மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications