கண்ணீருடன் தனியாக.. கடைசி 2 பந்தில் தவறு செய்துவிட்டேன்.. ஓய்வறையில் கதறி அழுத டேவிட் மில்லர்!
டெல்லி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது டேவிட் மில்லர் எடுத்த தவறான முடிவு, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது. இதனால் டெல்லி அணியின் ஓய்வறையில் டேவிட் மில்லர் தனியாக அமர்ந்து அழுதிருக்கிறார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் கடைசி 6 பந்தில் டெல்லி அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 11 ரன்களை டெல்லி அணி சேர்த்திருந்தது. இதனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது டேவிட் மில்லர் களத்தில் இருந்ததால், நிச்சயம் டெல்லி அணியின் வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்டது. ஆனால் 5வது பந்தில் டேவிட் மில்லர் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார்.
அந்த ஒரு ரன்னை எடுத்திருந்தால், ஆட்டம் சமனில் முடிந்திருக்கும். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அந்த பந்தை பிரசித் கிருஷ்ணா கொஞ்சம் பவுன்ஸ் உடன் வீச, அது விக்கெட் கீப்பர் பட்லர் கைக்கு சென்றது. இதனால் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ரன் அவுட்டாக, குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி தங்களின் கைகளில் இருந்த வெற்றியை, குஜராத் அணியிடம் தாரைவார்த்தது. டெல்லி அணியின் இந்த தோல்விக்கு டேவிட் மில்லரின் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 5வது பந்தில் ஒரு ரன்னை எடுத்திருந்தால் கூட, குறைந்தபட்சம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். அதேபோல் குல்தீப் யாதவும் 1 ரன்னை எளிதாக எடுக்க கூடிய வீரர் தான்.
இதனால் டேவிட் மில்லரின் தவறான முடிவு டெல்லி தோல்விக்கு காரணமாகியது. இந்த நிலையில் போட்டிக்கு பின் டெல்லி அணியின் ஓய்வறையில் இருந்து டேவிட் மில்லர் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டேவிட் மில்லருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications