Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெரியுமா? 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் 4 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது ஏன்? காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 50 ஓவர் உலககோப்பை போட்டி ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுவது ஏன்? என்று யோசித்து உள்ளீர்களா? இதன் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 முறை உலககோப்பை தொடர்கள் நடந்துள்ளன. அந்த சமயங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நாடுகளுடன் சேர்ந்து தான் இந்தியா நடத்தி உள்ளது.

Do you know why the World Cup cricket tournament is held once in 4 years? details here

ஆனால் இப்போது தான் முதல் முறையாக உலககோப்பை போட்டி முழுவதையும் இந்தியா தனியாக ஏற்று நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கிய உலககோப்பை தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற லீக் ஆட்டத்தின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவும் பைனலுக்கு முன்னேறின. இன்று 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்றுடன் முடிவுக்கு வரும் 50 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்ததாக மீண்டும் 2027 ம் ஆண்டில் நடைபெற உள்ளது. அந்த உலககோப்பை தொடரை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் ஏற்று நடத்த உள்ளன. சரி இது இருக்கட்டும். ஏன் 50 ஓவர் உலககோப்பை போட்டி மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என என்றாவது யோசித்து இருக்கீங்களா?. 20 ஓவர் உலககோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில் இதற்கு மட்டும் ஏன் 4 ஆண்டுகள் பிடிக்கிறது?

இந்த கேள்வியை சிலர் யோசித்து இருக்கலாம். பலர் யோசிக்காமல் இருக்கலாம். சரி யோசித்தாலும், யோசிக்காமல் இருந்தாலும் கூட அவர்களுக்கான விடை என்பது இங்கே உள்ளது. அதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

பொதுவாக உலகோப்பை போட்டியில் பங்கேற்க தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த தகுதி சுற்றில் பங்கேற்கும் அணிகளை நடைமுறையை பயன்படுத்தி தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு தகுதி சுற்று போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கான இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை உலககோப்பை தொடர் நடத்தும் நாடு மேற்கொள்ள வேண்டும்.

அதோடு உலககோப்பை தொடர் என்பது சுமார் ஒன்றரை மாதங்கள் (2023 உலககோப்பை அக்டோபர் 5ல் தொடங்கி இன்று முடிவுக்கு வருகிறது)வரை நடக்கும் நீண்ட தொடராகும். குறைந்தபட்சம் 10 அணிகள் விளையாடும் நிலையில் தினமும் போட்டிகள் இருக்கும். இதனால் பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் வந்து செல்வார்கள். அவர்களுக்கு ஏற்ப தங்கும் இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதோடு வீரர்களுக்கான தங்கும் இடம், விஐபிக்களுக்கான தங்கும் இடம், வீரர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இதுமட்டுமின்றி வானிலை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களையும் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை நல்ல திட்டமிடலுடன் பொறுமையாக சரியான வகையில் மேற்கொள்ள 4 ஆண்டு வரை தேவைப்படுகிறது. இதனால் தான் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+