40 வயதில் ஐசிசி உலகக்கோப்பை விளையாட திட்டமா? ரோஹித் சர்மா பதிலால் அதிர்ந்துபோன இந்திய ரசிகர்கள்!
துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு தொடர்பாக அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால திட்டங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் தெரியும் என்று கூறிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமே கிடையாது என்று அழுத்தி கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல் 2 ஆண்டுகளில் 2 ஐசிசி கோப்பைகளை வென்று கேப்டன் ரோஹித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் 24 ஐசிசி போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தோனிக்கு பின் மிகச்சிறந்த இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா உருவெடுத்துள்ளார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமே கிடையாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூறுகிறேன். எதிர்கால திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் தெரிய வரும். தற்போதைய சூழல், அப்படியே தொடரும் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் பேச்சு அவரது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதாகும் ரோஹித் சர்மா, இறுதிப் போட்டியில் 83 பந்துகளில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை விளாசி தள்ளினார். ஆனால் அதற்கு முன்பாக ரோஹித் சர்மாவின் ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா தொடரின் போது தனது இடத்தை பறிகொடுத்தார்.
கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட முடியாமல் ரோஹித் சர்மா திணறினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று ரோஹித் சர்மா அறிவித்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வுபெறும் முடிவை ரோஹித் சர்மா எடுத்துவிட்டு, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட எந்த தொடரும் திட்டமிடப்படவில்லை. அடுத்த ஐசிசி தொடர் என்றால், அது 2027 உலகக்கோப்பை மட்டுமே இருக்கிறது. அப்போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகி இருக்கும் என்பதால், என்ன திட்டத்துடன் ரோஹித் சர்மா இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications