இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்குமா? சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜெய் ஷா.. கதறும் ஒளிபரப்பாளர்கள்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் வழியில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்பது சந்தேகம் என்று பேசி வரும் சூழலில், ஐசிசி தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை நம்பி ஒளிபரப்பாளர்கள் இருக்கும் சூழலில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் ட்விட்ஸ் கொடுப்பது ஜெய் ஷாவுக்கு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவு அடைகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் அத்தனை போட்டிகளும் இலங்கை மைதானத்திலேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியும் இந்தியாவில் விளையாட மறுத்து வந்தது.

ஆனால் ஐசிசி பிடிவாதமாக வங்கதேசம் அணி விளையாடும் போட்டிகளில் இந்தியாவில் மட்டுமே நடக்க வேண்டும் என்று கூறி வந்தது. ஆனால் கடைசி வரை வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் இறங்கி வரவில்லை. ஐசிசி தரப்பில் 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற முடிவை பாகிஸ்தான் பிரதமர் முடிவு செய்வார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ஐசிசிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஏனென்றால் வங்கதேசம் அணி பங்கேற்காததன் மூலமாகவே மிகப்பெரிய நிதி சிக்கலை ஐசிசி எதிர்கொள்ளும்.
தற்போது பாகிஸ்தான் அணியும் விலகினால், அது ஒளிபரப்பாளர்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி நேரடியாக எச்சரித்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை என்றால், இனி பிஎஸ்எல் தொடருக்கு எந்த சர்வதேச வீரருக்கும் அனுமதி அளிக்கப்படாது.
சர்வதேச அணியுடன் எந்த ஒரு இருதரப்பு கிரிக்கெட் தொடரும் விளையாட முடியாது, ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளது. ஆனால் வங்கதேச அணியின் முடிவுக்கு பாகிஸ்தான் அணி ஆதரவாக இருப்பதால், பாகிஸ்தான் விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜெய்ஷாவுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications