பாகிஸ்தான் அணியின் விருப்பம் அதுதானா.. அபிஷேக் சர்மா விளையாடுவாரா? சூர்யகுமார் யாதவ் பதில்!
கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் அபிஷேக் சர்மா களமிறங்க உள்ளதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதி செய்திருக்கிறார். பாகிஸ்தான் அணி வீரர்கள் அபிஷேக் சர்மா விளையாட வேண்டும் என்று விரும்புவதாக கூறிய சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக அவர் களமிறங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக நடந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போதே அவருக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. இரு போட்டிகளுக்கும் இடையில் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சைப் பெற்றுக்கொண்ட அபிஷேக் சர்மாவின் உடல் எடையும் குறைந்தது. இதன்பின் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் போதுமான அளவிற்கு ஓய்வு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது. அவரின் கம்பேக்கை கம்பீர் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலியும், இந்தியாவின் வலிமையான அணிக்கு எதிராக விளையாட விரும்புகிறோம். அவர் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நாளை விளையாடுவார் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணி வீரர்கள் அபிஷேக் சர்மாவை எதிர்த்து விளையாடினால்.. சரிதான்.. அவர் நாளை களமிறங்குவர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications