இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. பட்டாசு + இனிப்புடன் சென்னை உள்பட நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியை தழுவியது. இதையடுத்து சென்னை மெரினா உள்பட நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலககோப்பை போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் தொடக்க வீரரான இசான் கிஷன் தன்னுடைய அதிரடியாக விளையாடினார். 10 பவுண்டரி, மூன்று சிக்சருடன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
இந்தியா வெற்றி
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாறியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் சுருண்டது 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதோடு இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
சென்னையில் கொண்டாட்டம்
இந்நிலையில் தான் இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை மெரினாவில் எல்இடி ஸ்கிரீனில் ரசிகர்கள் கிரிக்கெட் பார்த்தனர். மொத்தம் 3 இடங்களில் ஸ்கிரீன் வைக்கப்பட்டு இருந்தது.
இந்தியா வென்றதும் அவர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து இந்தயி அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு +இனிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்பட நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் ஊட்டியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த போட்டியின்போதும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கி கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் அதற்கு பதிலடியாக நம் நாடு மேற்கொண்ட ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகி உள்ளது. இப்படியான சூழலில் தான் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைக்குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications