நாளை இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்களா? கேப்டன் சல்மான் அலி பதில்!
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்களா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பதில் அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டி எப்படி விளையாடப்பட வேண்டுமோ, அப்படிதான் விளையாடப்பட வேண்டும் என்று கூறிய சல்மான் ஆகா, இந்திய வீரர்கள் முன் வந்தால் நாங்கள் கைகுலுக்க எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளது. ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்திய வீரர்கள் கூறிவிட்டனர். இதனால் மோசின் நக்வி ஆசியக் கோப்பையுடன் பறந்துவிட்டார். தற்போதும் கூட ஐசிசியின் சில வார்னிங்கிற்கு பின் இந்திய அணியுடன் விளையாட பாகிஸ்தான் அணி ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா செய்தியாளர்களை சந்தித்த போது இரு அணிகளும் கைகுலுக்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், கிரிக்கெட்டை சரியான மனநிலையுடன் விளையாட வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து முக்கியம் இல்லாவிட்டாலும், கிரிக்கெட் எப்போதும் எப்படி விளையாடப்பட வேண்டுமோ, அப்படியே விளையாடப்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார். இந்தியா விரும்பினால் தனது அணி கைகுலுக்குவதற்கு தயாராக இருக்கும் என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார். இந்த விஷயத்திற்காகவும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கூடுதலாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி இருக்கின்றனர். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றதால், பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று தீவிரமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications