ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவிடம் வம்பு செய்த காவ்யா மாறன்.. இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்கதானா!
மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மோசமான தோல்வியை பெற்றதையடுத்து, காவ்யா மாறனை ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்குவதற்காக தான், ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் திட்டங்களில் குறுக்கிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களில் ஆர்சிபி அணி விரட்டியது. ஐதராபாத் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பவுலர்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். உனாத்கட், நிதிஷ் ரெட்டி, சிவம் துபே, இஷான் மலிங்கா என்று சொல்லிக் கொள்ளும்படி எந்த பவுலரும் இல்லை.

அதேபோல் ரன்களை வாரி வழங்கும் வள்ளலான ஹர்சல் படேல் மிடில் ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்துவிடுகிறார். இதனால் கம்மின்ஸ் வரும் வரை ஐதராபாத் அணியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அனிருத் பாடல்களை பயன்படுத்தியதால், சிஎஸ்கே வீடியோவுக்கு சிக்கல் வந்தது.
காவ்யா மாறன் தரப்பில் நீதிமன்றம் வரை சென்றதால், சிஎஸ்கே அணி சோசியல் மீடியாவில் எந்த இசையையும் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மினி ஏலத்தின் போதும் சிஎஸ்கே அணி வாங்க திட்டமிட்டிருந்த வீரர்களின் விலையை ஏற்றிவிடுவதில் காவ்யா மாறன் குறியாக இருந்தார். பிரசாந்த் வீர் விலையை ஏற்றிவிட்டு காவ்யா மாறன் நக்கலாக சிரித்தது சர்ச்சையாகியது.
அதேபோல் கார்த்திக் சர்மாவின் விலையை ஏற்றிவிட்ட காவ்யா மாறன், சலீல் அரோராவை வாங்கி சென்றார். இளம் வீரர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், ஜேசன் ஹோல்டரை திட்டமிட்டபடி சிஎஸ்கே அணியால் வாங்க முடியவில்லை. இது ஐபிஎல் ஏலத்தின் ஒரு அங்கம் என்றாலும், சிஎஸ்கே அணியை காவ்யா மாறன் தொடர்ச்சியாக வம்புக்கு இழுத்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியை திட்டமிட்டபடி வீரர்களை வாங்கவிடாத காவ்யா மாறன், இப்படியொரு பவுலிங் அட்டாக்கை உருவாக்கி இருப்பது விவாதமாகியது. இப்படியொரு மோசமான பவுலிங் அட்டாக்கை உருவாக்கிவிட தான் சிஎஸ்கே அணியை வம்பிழுத்து வந்தாரா என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
ஹேசல்வுட் இல்லப்பா.. ஆர்சிபி பிளேயிங் 12ல் நடக்கும் 2 மாற்றங்கள்.. பெங்களூரில் ரன் மழைக்கு ரெடியா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications