வாழ்ந்தா இப்படி வாழணும்.. ராஞ்சியில் 4வது வீட்டை பிரம்மாண்டமாக கட்டிவரும் தோனி.. மிரளும் ரசிகர்கள்!
ராஞ்சி: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனிக்கு சொந்த ஊரான ராஞ்சியில் மட்டும் 3 வீடுகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் தற்போது புதிதாக ஒரு வீட்டை தோனி கட்டி வருகிறார். இந்த 4 வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதனை பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக தோனி வலம் வந்து கொண்டிருக்கிறார். 44 வயதை எட்டிவிட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சிஎஸ்கே அணிக்குள் தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரரான கார்த்திக் சர்மாவையும் சிஎஸ்கே அணி ரூ.14.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதனால் தோனியின் கடைசி சீசனாக இது அமையலாம். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் சில போட்டிகளில் மட்டுமே தோனியை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த நிலையில் சொந்த ஊரான ராஞ்சியில் தோனி புதிய வீடு ஒன்றை கட்டி வருவது தெரிய வந்துள்ளது. இதுவரை ராஞ்சியில் தோனியின் பெயரில் 3 வீடுகள் இருக்கின்றன.
தற்போது 4வது வீட்டை தோனி கட்டி வருகிறார். தோனியின் முதல் வீடு மெகான் ஸ்டேடியம் எதிரில் உள்ள மெகான் குவார்ட்டர்ஸில் இருக்கிறது. அங்குதான் தோனி சிறுவயதில் வாழ்ந்தார். அந்த வீடு பூட்டி இருந்தாலும், தோனியின் ரசிகர்கள் பலரும் அந்த வீட்டின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன்பின் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து நிரந்தர வீரராக மாறிய பின், செளர்யா என்ற பெயரில் பங்களாவை கட்டினார். ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை தோனியின் குடும்பத்தினர் இந்த வீட்டிலேயே இருந்தனர். இந்த வீட்டின் சுவரில் தோனியின் பெயர் மற்றும் ஜெர்சி நம்பரும் எழுதப்பட்டிருக்கும். 2007 உலகக்கோப்பை தொடர் தோல்விக்கு பின் இந்த வீடு ரசிகர்களால் தாக்கப்பட்டது.
தற்போது தோனி ராஞ்சி ரிங் ரோடு பகுதியில் உள்ள கைலாஷ் பார்வத் பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த வீட்டில் தோனிக்கு என்று பிரத்யேக ஒரு வீடும், பைக் மற்றும் ஸ்விம்மிங் பூல் ஆகியவையும் உள்ளது. அதேபோல் பேட்மிண்டன் அரங்கும் வைத்திருக்கிறார். தற்போது புதிதாக ராஞ்சியின் சிம்பா பகுதியில் புதிய வீடு ஒன்றை தோனி கட்டி வருகிறார்.
தோனியின் பண்ணை வீட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நகரில் இருந்து கொஞ்சம் வெளிப் பகுதியில் வீடு அமைந்திருப்பதால், தோனியின் வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி வெளியில் சென்று வருவதற்கும் இந்த பகுதி சாதகமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த வீட்டை கூடுதல் வசதிகளுடன் கட்ட தோனி முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications