ஒரே போட்டி.. 4 ஓவரில் 11 டாட் பால், 2 விக்கெட்.. குல்தீப் யாதவிற்கு செக் வைத்த ரவி பிஷ்னாய்!
கவுகாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் 4 ஓவர்கள் வீசி 2 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவிற்கு செக் வைத்திருப்பதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவி பிஷ்னாயை பொறுத்தவரை சுமார் ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வுக்கு அனுப்பப்பட்டதால், பிசிசிஐ ரவி பிஷ்னாய்யை தேர்வு செய்தது. இந்தப் போட்டியிலும் கூட வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனால் ரவி பிஷ்னாய் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். பவர்பிளேவிலேயே ரச்சின் ரவீந்திரா அடித்த ஷாட்டை அபாரமாக ஓடி சென்று கேட்ச் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து 5வது ஓவரிலேயே ரவி பிஷ்னாய் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். பிலிப்ஸ் போன்ற வலிமையான பேட்ஸ்மேன் இருந்த போதும், ஒரு ரன் மட்டுமே அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார்.
பின்னர் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்ட அவர் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் 12வது ஓவரை வீச வந்த போது 4 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்ததோடு, சாப்மேன் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து 16வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 9 ரன்களை விட்டுக் கொடுத்து அதிரடி வீரர் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனால் ரவி பிஷ்னாய் 4 ஓவரில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த 4 ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு, 11 டாட் பால்களையும் வீசியுள்ளார். ரவி பிஷ்னாய்க்கு இந்தப் போட்டி மிகச்சிறந்த கம்பேக் போட்டியாக அமைந்துள்ளது. அதேபோல் மோசமான பவுலிங் செய்து வரும் குல்தீப் யாதவிற்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications