3 இன்னிங்ஸில் வெறும் 61 ரன்கள்.. ரோகித் சர்மாவின் சொதப்பல் ஃபார்ம்.. கம்பீர் எடுக்கப்போகும் முடிவு!
இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 3 இன்னிங்ஸில் வெறும் 61 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இந்த 3 இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காததால், கம்பீர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களை குவித்துள்ளது. வாழ்வா சாவா போட்டி என்பதால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

வழக்கமாக தொடக்கத்திலேயே அதிரடி காட்டும் ரோகித் சர்மா, இந்த இன்னிங்ஸில் நிதானம் காட்டினார். ரோகித் சர்மாவுக்கு பெரிதாக கனெக்ட் ஆகாத சூழலில், நியூசிலாந்து பவுலர்கள் ஃபுல்லர் லெந்தில் மட்டுமே பந்துவீசி வந்தனர். இதனால் தடுமாறிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 3 இன்னிங்ஸிலும் சேர்த்தே 61 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா கைப்பற்றினார். தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் நியூசிலாந்து ஒருநாள் தொடர் ரோகித் சர்மாவுக்கு மோசமான தொடராக அமைந்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுவதில்லை. இருவரில் ரோகித் சர்மாவை ஓய்வுக்கு செல்ல மறைமுகமாக தேர்வுக் குழு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் ரோகித் சர்மா மீண்டும் பழைய ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்திருந்தார்.
இந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஃபார்மின்றி ரன்களை சேர்க்க முடியவில்லை. இதன்பின் டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவை நடக்கவுள்ளது. இதனால் கம்பீர் ரோகித் சர்மா தொடர்பாக ஏதேனும் ஒரு முடிவை எடுப்பார் என்று விவாதம் நடந்து வருகிறது. இது ஹிட்மேன் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications