Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதாளத்தில் சிஎஸ்கே பிராண்ட் வேல்யூ.. சஞ்சு சாம்சனை வாங்க இதுதான் காரணம்.. தோனி வியூகமே தனி ரகம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த 2 நாட்களாகவே சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலமாக சிஎஸ்கே அணிக்கு வந்துள்ளார். இந்த டிரேட் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பலரும் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த டிரேட்டுக்கு பின்னணியில் உள்ள காரணத்தை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கியது. இதற்காக ரூ.116 கோடி வரை மும்பை அணி நிர்வாகம் செலவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது. தற்போது அதனை மிஞ்சும் வகையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் முடிவடைந்திருக்கிறது.

Sanju Samson Trade

அதாவது சிஎஸ்கே அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜாவை டிரேடில் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ராஜஸ்தான் அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியிடம் தாரை வார்க்க தயாராகிவிட்டது. இருவருமே மிகப்பெரிய வீரர்கள் என்றாலும், இந்த டிரேட்க்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வெற்றிகரமான அணிகளில் முதலிடம் சிஎஸ்கே அணிக்குதான். ஏனென்றால் 18 சீசன்களில் 5 முறை கோப்பை வென்றுள்ளதோடு, தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. இதுவரை ஆடிய 16 சீசன்களில் 4 முறை மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதேபோல் தோனிக்கு நிகரான நட்சத்திர வீரர்கள் இல்லாததால், சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூவும் குறைந்துவிட்டது. சிஎஸ்கே அணியை விடவும் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் சிஎஸ்கே அணியை முந்தி சென்றுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியில் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரரை கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரர்கள் யாரும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு வரப் போவதில்லை. ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் இந்திய அணியில் விளையாடும் வீரரை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்று சிஎஸ்கே நிர்வாகம் கணக்கு போட்டுள்ளது.

இந்த சூழலில் தான் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களுக்கும் சஞ்சு சாம்சனுக்கும் மோதல் வெடித்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் தன்னை ரிலீஸ் செய்ய கூறிவிட்டார். சஞ்சு சாம்சன் போன்ற பிராண்ட் வேல்யூ மிக்க வீரர் ஏலத்திற்கு வந்தால், அவரின் மதிப்பு உச்சத்திற்கு ஏறிவிடும். இதனால் அவரை மினி ஏலத்திற்கு கொண்டு வராமல், டிரேடில் வாங்க வேண்டும் என்று சிஎஸ்கே முடிவு செய்து காய்களை நகர்த்தியது.

அதேபோல் சஞ்சு சாம்சனுடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அவரும் சிஎஸ்கே அணிக்கு மட்டுமே செல்வேன் என்று அடம் பிடிக்க, ராஜஸ்தான் அணி இறங்கி வந்துள்ளது. இதன் மூலமாக தோனியின் இடத்தை சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அது சரியான முடிவா என்பதை அடுத்த ஆண்டு வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+