குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்!
அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 3வது முறையாக ஹேசல்வுட் பவுலிங்கில் ஆட்டமிழந்து ஏமாற்றி இருக்கிறார். இதனால் குஜராத் அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் 600-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஆரஞ்சு கேப் ரேசில் டாப் ஃபார்மில் இருந்தார் சுப்மன் கில்.

அகமதாபாத் மைதானமும் அவருக்கு சாதகமான மைதானம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் வாழ்வா சாவா இறுதிப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என அகமதாபாத் மைதானத்தில் திரண்டிருந்த 1.3 லட்சம் குஜராத் ரசிகர்களும் பெரிதும் நம்பியிருந்தனர். இன்னிங்ஸை நிதானமாகத் தொடங்கிய கில், 10 ரன்கள் எடுத்த போது ஹேசல்வுட் வீசிய லென்த் பந்தை தவறான டைமிங்கில் ஆட முயன்று ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லுக்கு ஹேசல்வுட் ஒரு சிம்மசொப்பனமாகவே மாறிவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 கிரிக்கெட் வரலாற்றில், சுப்மன் கில் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறுவது இது 3-வது முறையாகும். இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஹேசல்வுட் பவுலிங்கில் 41 பந்துகளை எதிர்கொண்டுள்ள சுப்மன் கில், 59 ரன்கள் எடுத்து 3 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இம்முறையும் கில்லின் பேட்டிங் பலவீனத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பிரேக்-த்ரூ கொடுத்துள்ளார் ஹேசல்வுட். குஜராத் அணியின் கேப்டன் கில் அவுட்டாகி விரக்தியுடன் பெவிலியன் திரும்பிய போது, மொத்த மைதானமும் சோகத்தில் மூழ்கி அமைதியானது. குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் முக்கியமான ஃபைனல் போட்டியில் இப்படி ஏமாற்றிவிட்டாரே எனத் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆட்டத்தின் பவர்பிளே ஓவர்களிலேயே ரன் மெஷின் சுப்மன் கில்லை அவுட் செய்ய வேண்டும் என்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரின் வியூகம் கச்சிதமாக வேலை செய்துள்ளது. கில்லின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தியதன் மூலம், இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications