திலக், ரிங்கு, வாஷிங்டன் சுந்தர்.. உள்ளே வரும் சஞ்சு சாம்சன்.. இந்திய XIல் கம்பீர் செய்யும் மாற்றம்!
சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இந்திய அணி அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வென்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சில மாற்றங்களும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி நம்பர் 3ல் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் திலக் வர்மாவை நீக்க கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார்.
ஏனென்றால் 5 இன்னிங்ஸில் ஆடியுள்ள திலக் வர்மா 3 இன்னிங்ஸில் தலா 25 ரன்களும், ஒரு இன்னிங்ஸில் 31 ரன்களும், கடந்த போட்டியில் 1 ரன்னும் எடுத்திருக்கிறார். இதனால் இஷான் கிஷனை நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு தள்ளிவிடலாம் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதேபோல் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவருமே இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.
இதனால் கடந்த 5 போட்டிகளில் 4 அணிகள் ஆஃப் ஸ்பின்னருடன் பவுலிங்கை தொடங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் சஞ்சு சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர கம்பீர் ஆலோசித்து வருகிறார். அதேபோல் ரிங்கு சிங்கை நீக்கிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் குல்தீப் யாதவை கொண்டு வரலாம் என்றும், வாஷிங்டன் சுந்தர் இடத்தில் அக்சர் படேலை கொண்டு வரவும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே ரிங்கு சிங்கும் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், சொந்த ஊருக்கு புறப்பட்டிருக்கிறார். இதனால் இன்றைய பயிற்சியில் ரிங்கு சிங் பங்கேற்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 மாற்றங்கள் நடப்பது கிட்டதட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications