கையில் இல்லாத மேட்சை.. அப்படியே மாற்றி வென்ற இந்தியா! எப்படி? நியூஸி. தோற்க காரணமான அந்த 2 பேர்!
துபாய்: நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா.. ஆட்டத்தின் போக்கையே மாற்றி வென்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்த நிலையில்.. கடைசி கட்டத்தில் நடந்த திருப்பங்கள் காரணமாக இந்தியா திரில் வெற்றி பெற்றது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. நியூசிலாந்து என்று வந்துவிட்டாலே இந்தியா பேட்டிங்கில் சொதப்புவதுதான் சமீபத்திய டிரெண்ட். அந்த வகையில் ரோஹித் சர்மா வெறும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் கில் வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சரிவை சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலியும் சர்ப்ரைஸ் கேட்ச் கொடுத்து.. வெறும் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிலிப்ஸ் பிடித்த கேட்சை அவரை மட்டுமின்றி மொத்த மைதானத்தையும் ஸ்டன் ஆக்கியது.
சரிவை மீட்ட ஐயர் - கடுப்பாக்கிய பாண்டியா
அதன்பின் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டிய கட்டாயம் மிடில் ஆர்டருக்கு இருந்தது. அதை உணர்ந்து நிதானமாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். 98 பந்துகள் பிடிக்க ஷ்ரேயாஸ் நிதானமாக 79 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டர் சரிவை மீட்டார் . இதில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் அடக்கம்.
அதேபோல் இன்னொரு பக்கம் அக்சர் பட்டேல் நிதானமாக ஆடி 61 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். ஐவரும் 3 பவுண்டரி 1 சிக்ஸர் என்று நம்பிக்கை அளித்தார்.
ஆனால் அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியாதான் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு போனார். 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தாலும்.. கடைசி ஓவரில் மட்டும் 3 டாட் பால், அதன்பின் விக்கெட் ஆனது என்று கடைசி ஓவரில் பெரிதாக ரன் அடிக்கும் கடுப்பாக்கினார். இதனால் அப்படி இப்படி திணறி ஒரு வழியாக இந்திய அணி 249 ரன்களை எடுத்தது.
அதிரடி நியூசிலாந்து
அதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. வில் யங் 22லும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களிலும் அவுட் ஆனாலும் கூட கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி 81 ரன்கள் எடுத்தார். 120 பந்துகளில் சிக்ஸ் எதுவும் அடிக்காமல் 7 பவுண்டரிகளை இவர் அடித்தார்.
நிதானத்தின் உருவமாக இவர் ஆடிய நிலையில், நியூசிலாந்து அணியின் கை ஒரு கட்டத்தில் ஓங்கியது. மற்றவர்கள் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் பெரிதாக விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். நேற்று இந்திய அணியில் பாஸ்டர் பவுலர் என்று பார்த்தால் ஷமி மட்டும்தான். ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர். மற்ற எல்லோருமே ஸ்பின் பவுலர்கள்தான்.
இது தொடக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும்.. கடைசி கட்டத்தில் வரிசையாக ஸ்பின் பவுலர்கள்தான் விக்கெட்டுகளை எடுத்தனர். மிடில் ஆர்டரில் பிலிப்ஸ், பிரேஸ்வெல், சான்ட்னர், ஹென்றி அதோடு ஓப்பனர் ரச்சின் ரவீந்திரா என்று மொத்த அணியையும் அடுத்தடுத்து காலி செய்தது வருண் சக்ரவர்த்திதான்.
அதிலும் 8, 9 வது விக்கெட்டுகளை அவர் எடுத்தது, மிடில் ஆர்டரை காலி செய்ததுதான் இந்திய அணி பக்கம் ஆட்டம் திரும்ப காரணமாக மாறியது. நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது.. பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி ஆட்டத்தை மாற்றியது ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களாக மாறின.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications