இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடக்குமா? மின் கட்டணம் நிலுவையால் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
ராய்ப்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையே 4ஆவது டி20 போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாயுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் படை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் இன்று நடைபெறும் 4ஆவது டி20 போட்டி ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த நான்காவது டி20 போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்க சில மணி நேரம் இருக்கும் நிலையில், இன்னுமே கூட மைதானத்தின் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. கடந்த 2009 முதல் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
3.16 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பு வேண்டுகோள் அளித்த நிலையில், தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், அது பார்வையாளர்களின் கேலரிக்கு மட்டுமே இருக்கும்.
மாற்றுத் திட்டம் என்ன: இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் நிலையில், மைதானத்தில் floodlights எனப்படும் மின்விளக்குகள் தேவை. ஆனால், அந்த சிறப்புத் தற்காலிக மின் இணைப்பில் இந்த மின்விளக்குகள் வராது. எனவே, இன்றைய போட்டிக்கு மின்விளக்குகளை இயக்க ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராய்ப்பூர் வட்ட பொறுப்பாளர் அசோக் கண்டேல்வால் கூறுகையில், "மைதானத்தின் தற்காலிக இணைப்பின் திறனை அதிகரிக்க கிரிக்கெட் சங்க செயலாளர் விண்ணப்பித்துள்ளார். இப்போது தற்காலிக இணைப்பில் 200kv மின்சாரம் மட்டுமே அங்கே வழங்கப்பட்டுள்ளது. அதை 1000 kv ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவில்லை" என்றார்.
என்ன பிரச்சினை: கடந்த 2018ஆம் ஆண்டில், அங்கே அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கே மின்சாரம் இல்லாத நிலையில், வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அப்போது தான் மைதானத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், ₹3.16 கோடி மின்சார கட்டணம் பாக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம் மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மின்கட்டணம் குறித்துத் தெளிவு இல்லாத நிலையில், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. அம்மாநில மின்வாரியம் நிலுவைத் தொகையை வழங்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தப்படவில்லை.
அடுத்து என்ன: அதன் பிறகே கடந்த 2018இல் அங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு அங்கே 3 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருணேஷ் சிங் பரிஹார் கூறுகையில், "சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சந்தேகம் உள்ளது. தற்போது முக்கிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. . சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட சிறப்பு கணெக்ஷனில் மட்டும் கேலரிக்கு மின்சாரம் கிடைக்கிறது" என்றார். இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையே போட்டி நடக்க சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications