இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடக்குமா? மின் கட்டணம் நிலுவையால் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
ராய்ப்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையே 4ஆவது டி20 போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாயுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் படை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் இன்று நடைபெறும் 4ஆவது டி20 போட்டி ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த நான்காவது டி20 போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்க சில மணி நேரம் இருக்கும் நிலையில், இன்னுமே கூட மைதானத்தின் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. கடந்த 2009 முதல் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
3.16 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பு வேண்டுகோள் அளித்த நிலையில், தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், அது பார்வையாளர்களின் கேலரிக்கு மட்டுமே இருக்கும்.
மாற்றுத் திட்டம் என்ன: இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் நிலையில், மைதானத்தில் floodlights எனப்படும் மின்விளக்குகள் தேவை. ஆனால், அந்த சிறப்புத் தற்காலிக மின் இணைப்பில் இந்த மின்விளக்குகள் வராது. எனவே, இன்றைய போட்டிக்கு மின்விளக்குகளை இயக்க ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராய்ப்பூர் வட்ட பொறுப்பாளர் அசோக் கண்டேல்வால் கூறுகையில், "மைதானத்தின் தற்காலிக இணைப்பின் திறனை அதிகரிக்க கிரிக்கெட் சங்க செயலாளர் விண்ணப்பித்துள்ளார். இப்போது தற்காலிக இணைப்பில் 200kv மின்சாரம் மட்டுமே அங்கே வழங்கப்பட்டுள்ளது. அதை 1000 kv ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவில்லை" என்றார்.
என்ன பிரச்சினை: கடந்த 2018ஆம் ஆண்டில், அங்கே அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கே மின்சாரம் இல்லாத நிலையில், வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அப்போது தான் மைதானத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், ₹3.16 கோடி மின்சார கட்டணம் பாக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம் மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மின்கட்டணம் குறித்துத் தெளிவு இல்லாத நிலையில், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. அம்மாநில மின்வாரியம் நிலுவைத் தொகையை வழங்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தப்படவில்லை.
அடுத்து என்ன: அதன் பிறகே கடந்த 2018இல் அங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு அங்கே 3 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருணேஷ் சிங் பரிஹார் கூறுகையில், "சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சந்தேகம் உள்ளது. தற்போது முக்கிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. . சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட சிறப்பு கணெக்ஷனில் மட்டும் கேலரிக்கு மின்சாரம் கிடைக்கிறது" என்றார். இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையே போட்டி நடக்க சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்!












Click it and Unblock the Notifications